பஞ்சாபில் ஆட்டோக்குள் அமர்ந்திருந்த பெண்ணிடமிருந்து போனை திருடர்கள் பறிக்க முயன்ற போது அதை மீண்டும் பிடுங்க நினைத்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
தற்போதைய காலத்தில் தெருவில் பெண்கள் அல்ல ஆண்களே நடந்து செல்வதற்கு சற்று அச்சமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் வழிப்பறி கொள்ளை தான். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருக்க கூடிய பொருட்கள், கைப்பை அல்லது அணிந்திருக்கக் கூடிய தங்க நகைகள் ஆகியவற்றை திருடிவிட்டு செல்லும் கொள்ளையர்கள் பல்வேறு இடங்களிலும் அதிகரித்துவிட்டனர். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தற்போதும் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
27 வயது இளம்பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷாவில் அமர்ந்து தனது மொபைலை உபயோகித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த திருடர்கள் அப்பெண்ணின் கையில் இருந்த போனை திருட முயற்சித்துள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த ஆட்டோ நகர்ந்ததால் அப்பெண் மொபைலை மீண்டும் பிடுங்க நினைத்த பொழுது ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். போனை திருட முயற்சித்தவர்கள் அப்பெண்ணை தாக்கிய போதும் போராடி அந்த போனை எடுத்து விட வேண்டும் என அப்பெண் கடினமாக இழுத்ததால் ஆட்டோவில் இருந்து வெளியே விழுந்து விட்டார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தான் பெண் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…