பஞ்சாபில் ஆட்டோக்குள் அமர்ந்திருந்த பெண்ணிடமிருந்து போனை திருடர்கள் பறிக்க முயன்ற போது அதை மீண்டும் பிடுங்க நினைத்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
தற்போதைய காலத்தில் தெருவில் பெண்கள் அல்ல ஆண்களே நடந்து செல்வதற்கு சற்று அச்சமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் வழிப்பறி கொள்ளை தான். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருக்க கூடிய பொருட்கள், கைப்பை அல்லது அணிந்திருக்கக் கூடிய தங்க நகைகள் ஆகியவற்றை திருடிவிட்டு செல்லும் கொள்ளையர்கள் பல்வேறு இடங்களிலும் அதிகரித்துவிட்டனர். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தற்போதும் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
27 வயது இளம்பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷாவில் அமர்ந்து தனது மொபைலை உபயோகித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த திருடர்கள் அப்பெண்ணின் கையில் இருந்த போனை திருட முயற்சித்துள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த ஆட்டோ நகர்ந்ததால் அப்பெண் மொபைலை மீண்டும் பிடுங்க நினைத்த பொழுது ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். போனை திருட முயற்சித்தவர்கள் அப்பெண்ணை தாக்கிய போதும் போராடி அந்த போனை எடுத்து விட வேண்டும் என அப்பெண் கடினமாக இழுத்ததால் ஆட்டோவில் இருந்து வெளியே விழுந்து விட்டார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தான் பெண் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…