இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் மகள் தமயந்தி பென் மோடி. இவர் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை வந்தார். தமயந்தி பென் மோடி பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து டில்லியில் உள்ள சிவில் லைன் பகுதிக்கு ஆட்டோவில் சென்று உள்ளார்.
அப்போது அவர் இறங்கும் போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவர் கையில் வைத்து இருந்த பர்ஸை பறித்து தப்பித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அந்த பர்ஸில் அவர் ஐம்பதாயிரம் பணமும் , இரண்டு மொபைல்களும் சில முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் கூறினார்.
இந்த சம்பவம் நடந்தது அந்த அருகில் டெல்லி துணைநிலை ஆளுநர் , முதலமைச்சர் வீடுகள் உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தமயந்தி பென் மோடி போலீசில் புகார் கொடுத்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இறுதியாக நோனு என்பவரை சிசிடிவி காட்சிகள் மூலமாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்களை வாங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…