“இறுதி மூச்சு வரை, நாட்டைப் பாதுகாத்த,வீரர்களின் அழியாத தியாகத்திற்கு,இந்த நாடு கடன்பட்டிருக்கும்” – முதல்வர் கெஜ்ரிவால்…!

Published by
Edison

கல்வான் பள்ளத்தாக்கின் முதலாம் ஆண்டு நினைவு குறித்து,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,”இறுதி மூச்சு வரை, நாட்டைப் பாதுகாத்த,நமது வீரர்களின் அழியாத தியாகத்திற்கு இந்த நாடு என்றென்றும் கடன்பட்டிருக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்,கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனால்,அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தியபோது,இருதரப்பு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

எனினும்,உயிரிழந்த சீன வீரர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப் பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.ஆனால்,40 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளின் உளவுத் துறை தெரிவித்தது.

இந்நிலையில்,கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்து இன்றுடன் ஒரு வருடம் ஆனதை நினைவு கூறும் வகையில்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான மோதல் நடைபெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.இறுதி மூச்சு வரை நாட்டைப் பாதுகாத்த நம் நாட்டின் துணிச்சலான வீரர்கள் அனைவரின் அழியாத தியாகத்திற்கு வணக்கம்.நமது வீரர்களின் அந்த அழியாத தியாகத்திற்கு இந்த நாடு என்றென்றும் கடன்பட்டிருக்கும்”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.

Published by
Edison

Recent Posts

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

14 minutes ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

40 minutes ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

2 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

9 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

11 hours ago