இது எனது கடைசி குட் மார்னிங் ஆக கூட இருக்கலாம். இந்த மேடையில் நான் உங்களை இங்கு சந்திக்காமல் இருக்கலாம். அனைத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் இறந்துவிடுகிறது. ஆத்மா இல்லை. ஆத்மா அழியாதது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணமாக்குவதில் மருத்துவர்களின் பங்கு பெரும் பங்காக உள்ளது. இதனால், சில மருத்துவர்கள் தங்களது கடைசி மூச்சி நிற்கும் வரை போராடி வருகின்றனர். அந்த வகையில், மும்பையில் உள்ள, செவ்ரி காசநோய் மருத்துவமனையைச் சேர்ந்த 51 வயதான மூத்த மருத்துவ அதிகாரி மனிஷா யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் திங்கட்கிழமை உயிரிழந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் இறுதியாக ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘இது எனது கடைசி குட் மார்னிங் ஆக கூட இருக்கலாம். இந்த மேடையில் நான் உங்களை இங்கு சந்திக்காமல் இருக்கலாம். அனைத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் இறந்துவிடுகிறது. ஆத்மா இல்லை. ஆத்மா அழியாதது.’ என உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…