Categories: இந்தியா

RBI : இம்மாதமே கடைசி.! 24,000 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது…

Published by
மணிகண்டன்

கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கியானது மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது இனி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், இம்மாதம் (செப்டம்பர்) 30க்குள் மக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தி இருந்தது.

செப்டம்பர் மாதம் தொடங்கிய நேரத்தில் தற்போதுவரை எவ்வளவு மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. எவ்வளவு மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதுவரை 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இன்னும் 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 93 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளன.

2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கென எந்தவித அடையாள அட்டைகளும் கொண்டு செல்லப்பட வேண்டியதில்லை. வங்கியில் கணக்கு வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருநாளைக்கு 20,000 ரூபாய் வரையில் ரூபாயாகவே மாற்றிக்கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே நடப்பில் உள்ள வங்கி விதிமுறைகளான 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்யும் போது பான் கார்டு விவரங்களை கொடுப்பது மற்றும் அந்தந்த வங்கிகளுக்கு என இருக்கும் விதிமுறைகள் ஆகிய விதிமுறைகள் நடப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…

14 minutes ago

”காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…

22 minutes ago

பாஜகவுடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – தவெக.!

சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி…

1 hour ago

திருவள்ளூர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை.!

திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள்…

2 hours ago

கோவை மாணவி கூட்டு வன்கொடுமை – 7 பேருக்கு வாழ்நாள் சிறை.!

கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்…

2 hours ago

“தோனியிடம் இருந்து கில் கற்றுக்கொள்ள வேண்டும்” – முன்னாள் பயிற்சியாளர் அறிவுரை.!

டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட்…

2 hours ago