S Jaishankar [Image Source : Reuters]
இந்தியாவுடன் உலகம் எந்தளவுக்கு இணைந்திருக்கிறது என்பதை ஒடிசா ரயில் விபத்து காட்டுகிறது என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஒடிசாவில் கடந்த 2ம் தேதி இரவு மூன்று ரயில்கள், பஹானாகா ரயில் நிலையம் அருகே, மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நமீபியாவுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக நேற்று தலைநகர் விண்ட்ஹோக் சென்று இந்திய புலம்பெயர்ந்தோர் மத்தியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுடன் உலகம் எந்த அளவு இணைந்திருக்கிறது என்பதை ஒடிசா ரயில் விபத்து நமக்கு தெரியப்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிற நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர். பிரதமர் மோடிக்கும் நிறைய செய்திகள் வந்துள்ளன. இந்தியாவுடன் உலகம் எந்த அளவு இணைந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்த விபத்து நாட்டின் 3-வது மிகப்பெரிய விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…