காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூனியன் பிரதேசமான காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள நவுகம் என்ற செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலில் இன்று 2 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததனர். பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காடி பகுதியில் நேற்று நள்ளிரவு அத்துமீறலில் ஈடுபட்ட பாக்.,ராணுவத்தினரிடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்ததாக இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரி தகவல் தெரிவித்த நிலையில் இந்த தாக்குதலில் மேலும் 4 வீரர்கள் காயம் அடைந்ததாகவும் மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் அத்துமீறி இந்திய எல்லைகளை குறிவைக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவ தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…