சி.டி.ரவியை வீழ்த்த காங்கிரஸ் வகுத்த மாஸ்டர் பிளான்.! 19 ஆண்டுகால பாஜக கோட்டை தகர்ந்தது.!

Published by
மணிகண்டன்

பாஜக தலைவர் சி.டி.ரவியை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவருடைய உதவியாளராக இருந்த தம்மையாவை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றுள்ளது. 

19ஆண்டுகாலமாக பாஜகவின் கோட்டையாக இருந்த சிக்மகளூர் தொகுதியை தற்போது காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதுவும், 19 ஆண்டுகளாக எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர், பாஜக முக்கிய தேசிய தலைவர், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்த சி.டி.ரவி நடந்து முடிந்த இந்த தேர்தலில் தோல்வி கண்டுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் ஒரு பக்காவான மாஸ்டர் பிளான் ஒன்றை தீட்டியுள்ளது அந்த தேர்தல் பின்புலத்தை பார்த்தால் தெரிந்துவிடும். சி.டி.ரவிக்கு முக்கிய முதன்மை உதவியாளராக இருந்தவர் தம்மையா. இவர் திடீரென பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சிக்மகளூர் தொகுதியில் சி.டி.ரவியை போலவே, தம்மையாவுக்கும்  செல்வாக்கு அதிகம். இதனை அறிந்த காங்கிரஸ் , சிக்மகளூர் தொகுதியில் சி.டி.ரவிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தம்மையாவை நிறுத்தியது. இதற்க்கு பலனாக 7 ஆயிரம் வாக்குக்கள் வித்தியாசத்தில் தனது குருவான சி.டி.ரவியை வீழ்த்தி, 19 ஆண்டுகால பாஜக கோட்டையை காங்கிரசிற்கு கைப்பற்றி தம்மையா தந்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

3 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

3 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

4 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

5 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

5 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

6 hours ago