மும்பை கோரத் தாக்குதலின் 12 ஆவது நினைவு தினம் இன்று

Published by
Rebekal

மும்பையில் நடைபெற்ற தீவிரவாத கோரத் தாக்குதலின் 12வது நினைவு தினம் இன்று.

மறக்க முடியாத பெரும் துயரை மும்பை மக்கள் அடைந்த கோரமான 12வது நினைவு தினம் இன்று. ஆம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் மக்கள் பரபரப்பாக தங்கள் வேலைக்கு செல்ல காத்துக் கொண்டிருந்த பொழுதுதான் துப்பாக்கி குண்டுகள் முழங்கி கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடந்தது. தங்கள் அருகில் இருந்தவர்களை திரும்பிப் பார்க்கும் சமயத்திலேயே தாங்களும் ரத்த வெள்ளத்தில் மிதந்த மும்பை மக்களின் ரத்தம் படிந்த நினைவு தினம் இன்று தான் அனுசரிக்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர் ஆயுதம் ஏந்தி கொண்டு கடல் வழியாக மீனவர்களை கொன்று விட்டு அவர்களின் படகுகள் மூலமாக மும்பைக்கு வந்து இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மும்பையில் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் தாக்குதல் நடத்திய முதலிடம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தான். அங்கு குவிந்திருந்த மக்களில் 58 பேர் பலியானதுடன் 120 பேர் காயமடைந்தனர். அதன்பின் அஜ்மல் கசாப் வழி நடத்திய தாக்குதலின் படி சென்ற தீவிரவாதிகள் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்த்திய இரண்டே நிமிடத்தில் மும்பையின் முக்கிய புள்ளிகள் வசித்து வரக்கூடிய நாரிமன் இல்லத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 25 பேர் பலியான நிலையில், இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் வெளிநாட்டினர் வசிக்கக்கூடிய மும்பையின் மிகப் பெரிய ஹோட்டல் தாஜ் மற்றும் ஓரியன் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இங்கு நடந்த தாக்குதல் தான் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது. இதில் பல வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

26ஆம் தேதி துவங்கிய 29-ஆம் தேதி வரை நீடித்த இந்த தாக்குதலில் தீவிரவாதிகளால் 300க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடிபட்டு இருந்தனர். மொத்தமாக இந்த தீவிரவாத தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 450 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமான அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கசாப்பிற்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களின் ரத்தம் மண்ணில்இன்னும் கறையாகத்தான் இருக்கிறது. இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இன்னும் மும்பை மக்களின் மனதிலிருந்து இந்த சம்பவம் மறந்த பாடில்லை.

Published by
Rebekal

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

1 hour ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

3 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago