மும்பை கோரத் தாக்குதலின் 12 ஆவது நினைவு தினம் இன்று

Published by
Rebekal

மும்பையில் நடைபெற்ற தீவிரவாத கோரத் தாக்குதலின் 12வது நினைவு தினம் இன்று.

மறக்க முடியாத பெரும் துயரை மும்பை மக்கள் அடைந்த கோரமான 12வது நினைவு தினம் இன்று. ஆம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் மக்கள் பரபரப்பாக தங்கள் வேலைக்கு செல்ல காத்துக் கொண்டிருந்த பொழுதுதான் துப்பாக்கி குண்டுகள் முழங்கி கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடந்தது. தங்கள் அருகில் இருந்தவர்களை திரும்பிப் பார்க்கும் சமயத்திலேயே தாங்களும் ரத்த வெள்ளத்தில் மிதந்த மும்பை மக்களின் ரத்தம் படிந்த நினைவு தினம் இன்று தான் அனுசரிக்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர் ஆயுதம் ஏந்தி கொண்டு கடல் வழியாக மீனவர்களை கொன்று விட்டு அவர்களின் படகுகள் மூலமாக மும்பைக்கு வந்து இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மும்பையில் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் தாக்குதல் நடத்திய முதலிடம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தான். அங்கு குவிந்திருந்த மக்களில் 58 பேர் பலியானதுடன் 120 பேர் காயமடைந்தனர். அதன்பின் அஜ்மல் கசாப் வழி நடத்திய தாக்குதலின் படி சென்ற தீவிரவாதிகள் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்த்திய இரண்டே நிமிடத்தில் மும்பையின் முக்கிய புள்ளிகள் வசித்து வரக்கூடிய நாரிமன் இல்லத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 25 பேர் பலியான நிலையில், இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் வெளிநாட்டினர் வசிக்கக்கூடிய மும்பையின் மிகப் பெரிய ஹோட்டல் தாஜ் மற்றும் ஓரியன் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். இங்கு நடந்த தாக்குதல் தான் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது. இதில் பல வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

26ஆம் தேதி துவங்கிய 29-ஆம் தேதி வரை நீடித்த இந்த தாக்குதலில் தீவிரவாதிகளால் 300க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடிபட்டு இருந்தனர். மொத்தமாக இந்த தீவிரவாத தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 450 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு காரணமான அஜ்மல் கசாப் தவிர மற்ற அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கசாப்பிற்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களின் ரத்தம் மண்ணில்இன்னும் கறையாகத்தான் இருக்கிறது. இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இன்னும் மும்பை மக்களின் மனதிலிருந்து இந்த சம்பவம் மறந்த பாடில்லை.

Published by
Rebekal

Recent Posts

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

17 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago