டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று கேரளா பயணம் செய்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா சிறப்பு ரயில் தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று கேரளா வந்தது. இதில் பயணம் செய்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முழு ஊரடங்கின் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் சேவை கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து 900-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கேரளாவுக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் நேற்று அதிகாலை திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. இந்த சிறப்பு ரயில் கோழிக்கோடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே நிற்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 3 ரயில் நிலையங்களிலும் பயணிகளை பரிசோதிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி ரயில்கோழிக்கோட்டை வந்தடைந்தது. இதில் 20 பேர் கொண்ட குழுக்களாக பயணிகளை இறக்கி, 10க்கும் மேற்பட்ட கவுன்டர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
இதேபோல திருவனந்தபுரத்தில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…