பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய் கூறி மாட்டிக் கொண்ட இளம்பெண் தற்கொலை!

Published by
Rebekal

தன்னை சிலர் ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்துவிட்டதாக அண்மையில் பொய் கூறி காவல் துறையில் சிக்கிக் கொண்ட கல்லூரி மாணவி தற்பொழுது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரியில் படித்து வரக்கூடிய மாணவி ஒருவர் மாலை நேரம் கல்லூரியிலிருந்து வீடு செல்லும் பொழுது, 7 இருக்கைகள் கொண்ட ஆட்டோவில் தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இருந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டதுடன் காவல்நிலையத்தில் அப்பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்ததில், சிசிடிவி காட்சிகள் மற்றும் சில ஆதாரங்கள் மூலம் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும், கல்லூரியிலிருந்து வீடு திரும்புவதற்கு தாமதமானதால் வீட்டில் இவ்வாறு பொய் கூறி உள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இவ்வாறு பெண்கள் பொய் கூறுவதால் உண்மை கூறுபவர்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள் என சிலர் கூறி வந்த நிலையில், தற்பொழுது இந்த பொய் குற்றச்சாட்டு கூறிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் மயக்கமான நிலையில் கிடந்த பெண்ணை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவர் உயிர் இழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வீட்டிலேயே உயிரிழந்து விட்டாரா, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைஅளித்த பின் உயிரிழந்தாரா என்பது குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. தற்பொழுது போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

Published by
Rebekal

Recent Posts

கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!

கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!

கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…

2 minutes ago

கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…

28 minutes ago

நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!

சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…

49 minutes ago

”அன்றே செத்துவிட்டேன்”.., அன்புமணி குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பிய ராமதாஸ்.!

சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…

1 hour ago

பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்.!

சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…

2 hours ago

”தாயை அடிக்க முயன்றவர்.., வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து” – ராமதாஸ் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு.!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…

2 hours ago