டெல்லி: மக்களவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தற்போது மாநில கட்சிகளிடம் தேசிய கட்சிகள் ஆதரவு கேட்கும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக நிதிஷ் குமார் (JDU), சந்திரபாபு நாயுடு (TDP) ஆகியோரின் ஆதரவை NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிகள் பெற முயற்சித்து வருகின்றன. இதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த சூழல் தான் இன்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் (I.N.D.I.A கூட்டணி) மற்றும் JDU தலைவர் நிதிஷ்குமார் (NDA கூட்டணி) ஆகியோர் ஒன்றாக பீகாரில் இருந்து விமானத்தில் பயணித்து டெல்லி வந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ்விடம், I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யுமா என்ற கேள்வியை செய்தியாளர்களிடம் கேட்டனர். அதற்கு. மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம். கொஞ்சம் பொறுமையாக இருந்து பாருங்கள் என கூறினார்.
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உடன் ஒரே விமானத்தில் ஒன்றாக பயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியானது குறித்த கேள்விக்கு , நாங்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தினோம் என்று கூறினார். மேலும், அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க தொடர்ந்து பாருங்கள் என கூறிவிட்டு சென்றார்.
I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…