மகாராஷ்டிரத்தின் மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டிரக் முன்னே சென்ற இரு கார்கள் மற்றும் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட மொத்தம் ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை – புனே அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி மீது பின்னால் வந்த டிரக் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருந்த ஒரு காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் மற்றொரு காரில் இருந்த ஒருவர் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மற்ற காரில் இருந்தவர்கள் மற்றும் லாரியில் இருந்தவர்கள் என 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நவி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வரக்கூடிய ஒருவர் தனது குடும்பத்தினருடன் புனேவில் இருந்து நவி மும்பைக்கு செல்லும் பொழுது ஏற்பட்ட இந்த விபத்தில் அவரது குடும்பத்தினர் நான்கு பேரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மற்றொரு காரில் இருந்த தம்பதிகளில் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் மகன் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…