சத்தியத்தை தோற்கடிக்க முடியாது -சச்சின் பைலட் ட்வீட்

சத்தியத்தை தோற்கடிக்க முடியாது என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், 30 எம்.எல்.ஏ. தனக்கு ஆதரவு இருப்பதாகவும், கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என சச்சின் பைலட் அறிவித்தார்.
இதற்குடையில் சச்சின் பைலட்டுக்கு நடைபெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சச்சின் பைலட் அறிவித்தார்.எனவே அசோக் கெலாட் நடத்திய கூட்டத்தில் 102 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டை காங்கிரசிலிருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றியதாகவும், துணை முதல்வர் பதவியில் இருந்தும், காங்கிரசிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், சச்சின் பைலட் தனது ட்விட்டர் பக்கத்தில், சத்தியத்தை தொந்தரவு செய்யலாம். ஆனால் தோற்கடிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
सत्य को परेशान किया जा सकता है पराजित नहीं।
— Sachin Pilot (@SachinPilot) July 14, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025