பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வரும் நிலையில், 3 நாள் பயணமாக இன்று மம்தா பானர்ஜி டெல்லி செல்கிறார்.
மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக இன்று தலைநகர் டெல்லி செல்கிறார். எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை இந்த பயணத்தின் போது மம்தா சந்திக்கவுள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின்போது வரும் புதன்கிழமை பிரதமர் மோடியும் சந்திக்க உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரேசின் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பிரதமரிடம் பேசுவார் என எதிரிபார்க்கபடுகிறது.
2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிரணியை உருவாக்க மம்தா முயற்சி செய்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரது டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்பயணத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க நேரம் கேட்டிரு உள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…