கேரள மாநிலம் திரிச்சூரில் யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர்.
திரிச்சூரில் உள்ள பலப்பிள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சைனுதீன்(50). இவரை நேற்று இரவிலிருந்து காணவில்லை என்பதால் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இவரது உடல் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள கணபதி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த மேலும் ஒரு நபரான பீதாம்பரம் விடியற்காலை 5.30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.
ரப்பர் தொழிலாளியான இவர் 6.30 மணியளவில் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த இருவரின் அடையாளங்களை வைத்து இவர்கள் யானை தாக்கி இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…