கேரளா தங்கக்கடத்தல் விவகாரம்… முக்கிய குற்றவாளிகள் கைது… என்.ஐ.ஏ தகவல்…

Published by
Kaliraj

கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக, என்.ஐ.ஏ.,தெரிவித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டு வந்தது கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில், துாதரகத்தின் முன்னாள் ஊழியரான, ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நடைபெரும் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பைசல் பரீத், ராபின்ஸ் ஹமீது ஆகியோர், யு.ஏ.இ.,யில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உட்பட, ஆறு பேரை கைது செய்து, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு, சர்வதேச காவல்துறையான, ‘இன்டர்போல்’ அமைப்பின் உதவி நாடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சந்தீப் நாயர் சார்பில், அலுவா நீதிமன்றத்தில், அவர்சார்பாக  ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘வழக்கு தொடர்பாக எனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் தானாக முன்வந்து தெரிவிக்கத் தயாராக உள்ளேன்’ என, அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago