கொல்கத்தாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 2 பேர் உயிரிழந்த சம்பவம்.!

Published by
கெளதம்

கொல்கத்தாவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 2 பேர் மருத்துவமனை வளாகத்தில் இறந்தனர்.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை இரண்டு பேர் இறந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நீண்ட நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

28 வயதான டைபாய்டு நோயாளி மற்ற இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்ததால் தள்ளுவண்டியில் இறந்தார். அதே நேரத்தில் உடல் வலி மற்றும் கால்கள் வீங்கியிருந்த ஒரு வயதான பெண், ஒரு காருக்குள் இறந்தார்.

இருவரின் குடும்ப உறுப்பினர்கள் டாக்டர்கள் தாமதமாக வந்ததாகவும், அது அவர்களின் மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. KMCH இன் அதிகாரி ஒருவர் மருத்துவமனையின் தரப்பில் அலட்சியம் காரணமாக இருவரும் இறந்து கிடந்ததாகக் கூறினார்.

இந்நிலையில் அவர்களில் ஒருவர் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஜெயநகரைச் சேர்ந்த அசோக் ருய்தாஸ். அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படும் இரண்டு அரசு மருத்துவமனைகள் அவர் கடந்த பதினைந்து நாட்களாக பராசத்தில் (வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில்) ஒரு தனியார் மருத்துவமனையில் டைபாய்டு சிகிச்சையில் இருந்தார். அவர் ஒரு கொரோனா நோயாளி இல்ல. இரண்டு மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டன. பின்னர் நாங்கள் அவரை KMCH  மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம் ருய்தாஸின் உறவினர் என்று கூறினார்.KMCH இல் கூட, அவர் நீண்ட நேரம் காத்திருக்கும்படி செய்யப்பட்டார், மருத்துவர்கள் வரும் நேரத்தில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றார்.

மேலும் முர்ஷிதாபாத் மாவட்டம் பஹாரம்பூரில் வசிக்கும் ஒரு வயதான பெண், வேனுக்குள் இறந்தார். இறந்தவரின் மகள் கூறுகையில், “அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது, ஏனெனில் அவர்  கொரோனா நோய்க்கு சோதிக்கப்படவில்லை. அவருக்கு உடல் வலி மற்றும் கால்கள் வீங்கியிருந்தன. அவரை மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அதானல் ஒரு காரை வாடகைக்கு எடுத்தோம். ஆனால் யாரும் என் அம்மாவிற்கு உதவவில்லை கடைசியாக ஒருவர் வந்தபோது அவர் கூறுகையில் ​​அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று அவரது மகள் கூறினார்.

இதே போல் கடந்த சனிக்கிழமையன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கொரோனா சோதனை செய்தவர் கே.எம்.சி.எச். அலட்சியம் காரணமாக அவர் முக்கியமாக இறந்துவிட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்களும் குற்றம் சாட்டியிருந்தனர்.

Published by
கெளதம்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago