Jodhpur RajasthanCM [FileImage]
உலக பாரம்பரிய நகரமாக ஜோத்பூரை, யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, ஜோத்பூரின் வளமான கலாச்சாரம், தனித்துவமான மரபுகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள் கொண்ட ஜோத்பூரை உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். பொது நிகழ்வில் பேசிய அசோக் கெலாட், ஜோத்பூரின் வளமான கலாச்சார பாரம்பரியம், தனித்துவமான மரபுகள் இவற்றையெல்லாம் பாராட்டி பேசினார்.
மேலும் நகரம் கடந்த காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குறிப்பிட்ட ரயில் தொடர்புகள் போன்ற பல சவால்களை கடந்து வந்துள்ளது என்றார். நாட்டிலேயே ராஜஸ்தான் ஒரு முன்மாதிரி மாநிலமாக வளர்ந்து வருவதாக தெரிவித்த கெலாட், மக்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக சமூக பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்றும் கூறினார்.
முதியோர்கள், விதவைகள், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட தோராயமாக ஒரு கோடி பேருக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை அரசு தற்போது வழங்குகிறது, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…