Jodhpur RajasthanCM [FileImage]
உலக பாரம்பரிய நகரமாக ஜோத்பூரை, யுனெஸ்கோ அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, ஜோத்பூரின் வளமான கலாச்சாரம், தனித்துவமான மரபுகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள் கொண்ட ஜோத்பூரை உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். பொது நிகழ்வில் பேசிய அசோக் கெலாட், ஜோத்பூரின் வளமான கலாச்சார பாரம்பரியம், தனித்துவமான மரபுகள் இவற்றையெல்லாம் பாராட்டி பேசினார்.
மேலும் நகரம் கடந்த காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குறிப்பிட்ட ரயில் தொடர்புகள் போன்ற பல சவால்களை கடந்து வந்துள்ளது என்றார். நாட்டிலேயே ராஜஸ்தான் ஒரு முன்மாதிரி மாநிலமாக வளர்ந்து வருவதாக தெரிவித்த கெலாட், மக்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக சமூக பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்றும் கூறினார்.
முதியோர்கள், விதவைகள், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட தோராயமாக ஒரு கோடி பேருக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை அரசு தற்போது வழங்குகிறது, குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…