ரூ.76,000 கோடியில் செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
நாட்டில் செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தி சூழலை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கார்களுக்கான செமிகண்டக்டர் கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 6 ஆண்டுகளில் ரூ.76,000 கோடியில் செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுபோன்று பாசன திட்டங்களுக்கு ரூ.93,068 கோடியில் மாநில அரசுகளுக்கு ரூ.37,454 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இதனை தெரிவித்தார்.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு திட்டம் 2021-26 ஆம் ஆண்டிற்கான பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயி யோஜனாவை செயல்படுத்துவதாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 2.5 லட்சம் எஸ்சி மற்றும் 2 லட்சம் எஸ்டி விவசாயிகள் உட்பட சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என கூறினார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…