குட்நியூஸ்..!மதிய உணவு திட்டத்தின் மூலம் 11.8 கோடி மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!

Published by
Edison

இந்தியாவில்,மதிய உணவு திட்டத்தின் மூலமாக 11.8 கோடி மாணவர்களுக்கு,அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன்காரணமாக,பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினால் பயனடையும் கோடிக்கணக்கான மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,மாணவர்களின் கவலையை போக்கும் வகையில்,தற்போது மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.அதாவது,நாடு முழுவதும் உள்ள 11.8 கோடி மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பணப் பறிமாற்ற திட்டத்தின் மூலம் பணம் அனுப்பப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி,மதிய உணவு திட்டத்திற்கு தகுதி உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் சமையல் செலவுக்கு சமமான தொகையை வழங்கும் திட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”மத்திய அரசு DBT மூலம் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி உதவி வழங்கும்.இதற்காக,ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும்,நாடு முழுவதும் உள்ள 11.20 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 11.8 கோடி குழந்தைகளுக்கு இந்த நிதியுதவி பயனளிக்கும்”,என்று கூறியுள்ளார்.

Published by
Edison

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

4 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

6 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

6 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

7 hours ago