மோடி – நிர்மலா சீத்தாராம் பட்ஜெட்..! சாமானியார் என்ன எதிர்பார்கிறார்கள்..!

Published by
kavitha

2019 இந்திய தேர்தலில்  2 வது முறையாக பாஜக தலைமையிலான மோடி அரசு தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள நிலையில் தான் இந்த அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் நாட்டு மக்களிடையே பெறும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டை புதியதாக  நிதியமைச்சர் ஆக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த அரசின் உடைய கடைசி பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது.மேலும் இந்த பட்ஜெட்டில் வருமான வரியின் உச்ச வரம்பு சுமார் 2 1/2 லட்சத்தில் இருந்து 5 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
அதே போல ரூ. 75 ஆயிரம் கோடி வருமான காப்பீட்டு திட்டத்தையும் விவசாயிகளுக்கு கொண்டு வந்தது.
‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி ‘என்று அழைக்கப்படும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.இதன்படி ரூ. 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்பார்ப்பு :
பட்ஜெட்டில் வருமான வரி குறித்த அறிவிப்புகள் ஏதும் இருக்க கூடாது என்ற எதிர்பார்க்க படுகிறது.
விவசாய திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகள்:
கார்ப்பரேட் மற்றும் தனிப்பட்ட வரி மற்றும் சலுகைகள் குறித்து எதிர்பார்க்கப்படுகிறது
வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ள நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்திரா காந்தி  இந்திய பிரதமாராக இருந்த சமயத்தில்  நிதித்துறையை தன்வசம் வைத்து இருந்தார்.அவரே நிதித்துறையை  கவனித்த முதல் பெண் என்று கூறப்பட்டாலும் தற்போது பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனே முதல் பெண் நிதியமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago