கடந்த வாரம் உ.பி மாநிலத்தில் உள்ள கான்பூரில் தேசிய கங்கை நதி ஆணையத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு படகு பயணத்தில் கங்கையை ஆய்வு செய்து விட்டு மோடி திரும்பிய போது படி ஏறுகையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
பின்னர் அங்கு இருந்த எஸ்.பி.ஜி வீரர்கள் மோடியை தாங்கி பிடித்தனர். மோடி கீழே விழுந்ததில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் அங்கு இருந்த ஒரு படிக்கட்டின் உயரம் மட்டும் சற்று உயரமாக இருப்பதால் அந்த படி கட்டை இடித்துக்கட்ட உ.பி அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அம்மண்டல கமிஷனர் பாப்டே கூறுகையில், “பிரதமர் மோடி தடுமாறி விழுந்த படிக்கட்டின் உயரம் மட்டும் சற்று அதிகமாக இருந்தது. விரைவில் அந்த படிக்கட்டை இடித்து விட்டு மற்ற படிக்கட்டு அளவிற்கு இணையாக கட்ட உள்ளதாக கூறினார்.இதற்கு முன்பும் சில பேர் அந்த படியில் தடுமாறி விழுந்துள்ளனர்”என கூறினார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…