ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கிடையில், பெண்ணின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் அச்சுறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று கவலை தெரிவித்தார்.
இது குறித்து மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் அச்சுறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது இருந்தபோதிலும், உ.பி. அரசு மவுனம் காத்து வருகிறது, இது வருத்ததையும் மிக கவலையும் அளிக்கிறது.
மேலும், சிபிஐ விசாரணைக்கு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் மாஜிஸ்திரேட் அங்கு தங்கியிருப்பதால் இந்த விஷயத்தை எவ்வாறு விசாரிக்க முடியும்? மக்கள் பயப்படுகிறார்கள் என்று அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…