ஆந்திர அரசியலில் சலசலப்பு.. சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிரசாந்த் கிஷோர்..!

Published by
murugan

ஆந்திராவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பிரசாந்த் கிஷோர் உதவுவார் என்ற செய்திகளுக்கு மத்தியில், பிரபல தேர்தல் ஆலோசகரும், (I-PAC) ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் நேற்று எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தார்.

ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் உடன் விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்தை பிரசாந்த் கிஷோர் வந்தடைந்தார். பின்னர் இருவரும் அமராவதியின் உண்டவல்லியில் உள்ள சந்திரபாபுநாயுடுவின் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு பிரசாந்த் கிஷோர் சந்திரபாபுநாயுடுவிடம் பேசினார்.

பின்னர், விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், சந்திரபாபுவை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்ததாகவும், அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அரசியலில் மிக மூத்த தலைவர் என்பதால், அழைத்தவுடன் வந்ததாகவும், நீண்ட காலமாக இந்த சந்திப்பு நிலுவையில் இருந்தது. அவரை சந்திப்பதாக உறுதியளித்தேன் அதனால் சந்தித்தேன் என கூறினார்.

கடந்த 2019 இல், பிரசாந்த் கிஷோர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் பணியாற்றினார். ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அக்கட்சி பெரும்பான்மை பலத்துடன் தெலுங்கு தேசம் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ  175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 151 இடங்களைக் கைப்பற்றியது. அதேபோல 25 மக்களவைத் தொகுதிகளில் 22 இடங்களை கைப்பற்றியது.

2014 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து, 2021இல் அவர் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்குத் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருந்த நிலையில், அதன் பிறகு ஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Recent Posts

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் – புதிய வீடியோ.!

அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…

31 minutes ago

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத்…

35 minutes ago

”பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்கிறது” – அன்புமணி குற்றசாட்டு.!

காஞ்சிபுரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில்…

1 hour ago

”பாமக-விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும்” – அன்புமணி.!

காஞ்சிபுரம் : பாமக கட்சிக்குள் தலைவர் பதவி தொடர்பாக 2 பேருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.…

2 hours ago

இனிமே UPI பரிவர்த்தனை மின்னல் வேகத்தில் இருக்கும்! NPCI அறிவிப்பு!

டெல்லி : இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்புவது இனி மிக…

3 hours ago

திமுகவை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு வயித்தெரிச்சல்! முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூருக்கு சென்று ரூ.1,194 கோடியிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து…

4 hours ago