உத்தரபிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் இன்று காலை நடைப்பயிற்சி செய்ய வெளியே சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் சஞ்சய் கோகர், மேற்கு உத்தரபிரதேசத்தின் பாக்பாத்தில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே இன்று காலை இறந்து கிடந்தார். இதனையடுத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டு 24 மணி நேரத்திற்குள் அறிக்கை கேட்டுள்ளார்.
பாஜக தலைவர் சஞ்சய் கோகர் தனக்குச் சொந்தமான இடத்தில் நடந்து கொண்டிருந்தபோது பலமுறை சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். கோகரின் உடல் கரும்பு தோட்டத்தின் அருகில் இருப்பதை மக்கள் மற்றும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
விசாரணையில் இது தனிப்பட்ட பகை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை முழுமையாக விசாரித்து விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவார். இந்த வழக்கில் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்று பாக்பத் மாவட்ட காவல்துறை அஜய் குமார் கூறினார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…