ஆகஸ்ட் 23-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிடுகிறார். அந்த வீடியோவில் உத்தரப்பிரதேசத்தின் இருக்கும் மிசாபூர் என்கிற மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக ரொட்டியும் அதனுடன் உப்பு கொடுக்கப்படுகிறது. இதனை வீடியோவாக பதிவிட்டு அதில் உத்தரபிரதேச அரசைடேக் டேக் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.
இதனை அடுத்து உத்தரபிரதேச அரசானது, அந்த நபர் மீது, ‘உத்தரபிரதேச அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிடுதல்.’ எனும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளது. ‘மேலும், ‘அவர் உள்ளூர் பத்திரிகையில் வேலை செய்து விட்டு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு வீடியோவை பதிவிட்டு, சமூக வலைத் தளம் மூலம் அவதூறு பரப்பும் நோக்கில் பதிவிட்டுள்ளார். எனவும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் ஒருவரான, பவன் ஜைஸ்வால் என்பவர் கூறுகையில், ‘இங்கு மதிய உணவாக ரொட்டி மற்றும் உப்பு கொடுக்கப்படும். அல்லது அரிசியுடன் சேர்த்து உப்பு கொடுக்கப்படும். எப்போதாவது பால் கொடுக்கப்படும். ஒருபோதும் வாழைப்பழங்கள் கொடுக்கப்படுவது இல்லை.’ என கூறினார். மேலும் அந்த வீடியோவில் இருப்பது உண்மைதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரபிரதேச அரசு விதியின்படி, தினமும் அரசு பள்ளியில் பயிலும் சுமார் 1.5 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு 450 கலோரி கொண்ட உணவு வழங்கப்பட வேண்டும். அதில் 12 கலோரி அளவு புரோட்டின் இருக்க வேண்டும். அரிசி ரொட்டி காய்கறிகள் பழங்கள் பால் என அனைத்தும் வாரத்திற்குள் மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…