மோப்ப நாயை கௌரவிக்கும் விதமாக சிலை வைத்த உத்தரபிரதேச காவல்துறையினர்!

Published by
Rebekal

இதுவரையில் 49 வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியதாக உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள முசாபர் நகர் காவல் துறையினர் டிங்கி எனும் உயிரிழந்த மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள போலீஸ் டாக் ஸ்பாட்டில் உறுப்பினராக பணியாற்றி வந்த ஏ எஸ் பி டிங்கி எனும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் இதுவரையில் முசாபர் நகர் காவல்துறையினருக்கு 49-க்கும் மேற்பட்ட சிக்கலான கிரிமினல் வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியாக இருந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இந்த நாய் உயிரிழந்ததை அடுத்து அந்த காவல்துறையினர் அனைவருமே தங்களுக்கு பேரழப்பு ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். டிங்கி நாய் உயிரிழந்தது தங்களுக்கு பேரிழப்பு எனவும் நான் இருந்த பொழுது எவ்வளவு சிக்கலான வழக்குகளைத் தீர்க்க உதவியது என்பதையும் நினைத்துப் பார்த்த காவல்துறையினர் இந்த நாய்க்கு சிலை ஒன்று அமைக்க முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி இந்த நாயை கௌரவிக்கும் விதமாக முசாபர்நகர் காவல்துறையினர் தற்பொழுது சிலை வைத்துள்ளனர். இந்த சிலையை காவல்துறை உயர் அதிகாரிகள் திறந்து வைத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் அவர்கள் தெரிவிக்கையில், முசாபர் நகர் போலீசார் 49 குற்ற சம்பவங்களை தீர்க்க உதவிய டிங்கி எனும் நாய் எங்களை விட்டுப் பிரிந்தது. அதனுடைய படைப்பும் பங்களிப்பும் போற்றப்படும் விதமாகத்தான் இந்த சின்னம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மோப்ப நாய்களை கையாளும் அதிகாரி சுனில் குமார் மூலம் சிலை திறக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

25 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago