உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 32 உடல்கள் மீட்பு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வு.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், தபோவான் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட திடிர் பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தேடுதல் மற்றும் நிவாரணம் :
வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐ.டி.பி.பி), தேசிய பேரிடர் பதிலளிப்பு படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் மாநில பேரிடர் பதிலளிப்பு படை (எஸ்.டி.ஆர்.எஃப்) ஆகியவற்றின் 600 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சாமோலி மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தின் விளைவாக துண்டிக்கப்பட்ட தொலைதூர கிராமங்களுக்கு ரேஷன், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்ற ஐ.டி.பி.பி ஜவான்களுக்கு நன்றி தெரிவிக்க உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்திருந்தார்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள 35 பேர்:
என்டிபிசியின் தபோவன்-விஷ்ணுகாட் திட்டத்தில் சுரங்கப்பாதையில் டைவர்ஸ் உள்ளிட்ட இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 2.5 கி.மீ நீளமுள்ள ‘ஹெட்ரேஸ் டன்னல்’ (எச்.ஆர்.டி) க்குள் 25-35 பேர் சிக்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கப்பாதையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களுக்குச் செல்ல சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன ஒரு அதிகாரி கூறினார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…