Categories: இந்தியா

Vanadium: குஜராத் கடற்கரையில் அரிய உலோக வெனடியம் கண்டுபிடிப்பு.!

Published by
செந்தில்குமார்

குஜராத்தின் அலங்கிற்கு அருகில் உள்ள கம்பாட் வளைகுடாவில் இருந்து சேகரிக்கப்பட்ட வண்டல் மாதிரிகளில் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளுக்கு முக்கியமான மூலப்பொருளான வெனடியம் (Vanadium) எனப்படும் அரிய உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் வளர்ந்து மின்சார வாகன (EV) உற்பத்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. ஏனெனில் வெனடியம் பேட்டரி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலப்பொருளாகும். இது வெனடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரிகளின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பேட்டரிகள் சாதாரண பேட்டரிகளை போல அல்லாமல்  பெரிய அளவிலான ஆற்றலை சேமித்து வைக்க உதவும். ஆனால், இந்த வெனடியம் இயற்கையில் எளிதில் கிடைக்காத ஒரு அரிதான உலோகம் ஆகும். இது டைட்டானோமேக்னடைட் போன்ற 55 வெவ்வேறு கனிமங்களில் காணப்படுகிறது.

இந்த டைட்டானோமேக்னடைட் என்பது உருகிய எரிமலை குழம்பு ஆனது விரைவாக குளிர்ச்சியடையும்போது உருவாகும் ஒரு பொருள். இதில் இந்த வெனடியம் உள்ளது. அருணாச்சல பிரதேசம், கர்நாடகா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் சிறிய அளவிலான வெனடியம் முன்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago