தெலங்கானாவை சேர்ந்த வேலாடி அர்ஜுன் தனது இரு அத்தை மகள்களை ஒரே மணமேடையில் வைத்து திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். கடந்த 3 வருட காலமாக இவரது அத்தை மகள்களான கான்பூரை சேர்ந்த உஷாராணி மற்றும் ஷம்புக்குடா கிராமத்தை சேர்ந்த சுரேகா என்ற இருவரையும் ஒருவருக்கொருவர் தெரியாமல் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரையும் 1 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அதை இருவரிடமும் கேட்டுள்ளார். இருவரும் ஒப்புக்கொள்ள, வீட்டில் இதுகுறித்து பேசிய போது, பெரியவர்கள் இருவரையும் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இது முறையான காரியம் அல்ல என்றும் கூறியுள்ளனர். ஆனால், இரு அத்தை மகள்களும் கட்டினால் இவரை தான் கட்டுவோம் என்ற முடிவான கருத்தை வீட்டில் எடுத்து வைத்துள்ளனர்.
இதன் பின்னர் வேறு வழியின்றி பெரியவர்கள் சம்மதிக்க, இருவரையும் கடந்த 14 ஆம் தேதி ஒரே மணமேடையில் வைத்து திருமணம் செய்துள்ளார். இருவரையும் இவர்களது ஆதிவாசிகள் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இது போன்ற சம்பவம் அங்கு நிகழாததால் இந்த திருமணம் குறித்த பேச்சு தான் அங்கு பரவலாக பேசப்படுகிறது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…