விஜய் மல்லையா,நீரவ் மோடி,மெகுல் ஆகியோரின் ரூ.19,000 கோடி சொத்துக்கள் பறிமுதல் – மத்திய அரசு!

Published by
Edison

விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் ரூ.19,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

பஞ்சாப்,எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்களான விஜய் மல்லையா,நிரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரை எப்படியாவது இந்தியா அழைத்து வர வேண்டும் என வங்கிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

19,000 கோடி ரூபாய் சொத்துக்கள்:

இந்நிலையில்,விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரூ.22,585.83 கோடி கடன்:

இது தொடர்பாக,நாடாளுமன்றத்தில் நேற்று எம்பி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:”விஜய் மல்லையா,நீரவ் மோடி, மொகுல் சோக்ஸி மூவரும் பொதுத்துறை வங்கியில்,அவர்களின் நிறுவனங்கள் மூலம் ரூ.22,585.83 கோடி கடன் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட சொத்துக்கள்:

எனினும்,கடந்த மார்ச் 15 நிலவரப்படி,பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் (PMLA) ரூ.19,111.20 கோடி மதிப்பிலான சொத்துகளில், 15,113.91 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும் ரூ.335.06 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மத்திய அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ” , என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!

ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!

டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…

5 minutes ago

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…

23 minutes ago

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

43 minutes ago

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…

1 hour ago

மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்  28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…

1 hour ago

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

17 hours ago