விகாஸ் துபே கொலை செய்ததை நியாயப்படுத்துவது நீதித்துறைக்கு புறம்பானது. அதே வேளையில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது என மத்தியப்பிரதேச (எம்.பி.) உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறினார்.
கான்பூரில் 8 போலீசாரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த விகாஸ் துபேவை மத்திய பிரதேச போலீசார் உஜ்ஜைனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை போலீசார் கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்கள் வந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்து நடந்தது.
இந்த விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை சரணடைய போலீசார் கூறினர். ஆனால், விகாஸ் துபே போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால், போலீசாரும் சுட்டனர், இந்த சம்பவத்தில் காயமடைந்த ரவுடி விகாஸ் துபேவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்தியப்பிரதேச (எம்.பி.) உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த சம்பவம் குறித்து நேற்று கருத்து கூறுகையில், ரவுடி விகாஸ் துபே கொலை செய்ததை நியாயப்படுத்துவது நீதித்துறைக்கு புறம்பானது. அதே வேளையில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது என கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி நேற்று (அதாவது நேற்று முன்தினம் ) அவரைப் போன்ற ஒரு பயங்கரமான குற்றவாளியை எவ்வாறு உயிருடன் பிடிக்க முடியும் என்று கேள்விகளை எழுப்பியது. ஒரு நாள் கழித்து, இன்று (அதாவது நேற்று) அதே கட்சி கேட்கிறது, அவர் ஏன் கொல்லப்பட்டார், ஏனெனில் அவரது மரணத்துடன் பல ரகசியங்கள் புதைக்கப்பட்டன. இது காங்கிரஸின் மனநிலையையும், அதன் சிந்தனை செயல்முறையையும் காட்டுகிறது என தெரிவித்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…