இந்தியாவின் வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகையால் கடும் போட்டியை சந்தித்த வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த 2018 ல் இருதுருவங்களும் இணைந்தன. எனினும் கடந்த மாதம் இரண்டு நிறுவனங்களும் ‛Vi’ என்ற ஒரே பிராண்டை அறிவித்தன. இதையடுத்து போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் 3ஜி சேவையிலிருந்து 4ஜி சேவைக்கு மாற்ற அந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இதை பல்வேறு கட்டங்களாக நிறைவேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே, இதனால் 900 MHz, 1800 MHz, 2100 MHz அலைக்கற்றைகளை 4ஜி சேவைக்கு மாற்ற முடிவு எடுககப்பட்டுள்ளது. அதே நேரம் 2ஜி சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்பு சேவை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை 100 கோடி இந்தியர்களுக்கு வழங்கப்படும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவீந்தர் தாக்கர் தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…