Categories: இந்தியா

தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு! 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? டிச.3ல் ரிசல்ட்…

Published by
பாலா கலியமூர்த்தி

நாட்டில் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சில நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது. இன்று, தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணியுடன் நேரம் முடிவடைந்தது.

இன்று காலை முதல் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த நிலையில், தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

எனவே, தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது.

அப்போது, இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. பின்னர், முக்கிய நிர்வாகி கட்சி மாறி ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், மிசோரம் மாநிலத்தில் சொராம்தங்காவின் எம்.என்.எப் கட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் (பி.ஆர்.எஸ்) கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தனர்.

சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி!

இந்த சூழலில் 5 மாநிலங்களில் ஆட்சி காலம் இந்த ஆண்டுடன் நிறைவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவ.7ம் தேதியும், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நவ.7ம் மற்றும் 17ம் தேதிகளிலும்,மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவ.17ம் தேதியும், ராஜஸ்தானில் நவ.23ம் தேதியும், தெலுங்கானாவில் இன்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவு பெற்றது.

இந்த 5 மாநிலங்களில் பெரும்பான்மையாக பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவுகிறது. ஒரு தரப்பினர் 5 மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், மற்றொரு தரப்பினர் பாஜக எழுச்சி பெறும் எனவும் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் மக்களவை தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்பதால் அனைவரும் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர்.

தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் மக்களிடம் கருத்துக்களை பெற்று வெளியிடப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் கட்சிகளாலும், பொதுமக்களாலும் உன்னிப்பாக நோக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், 5 மாநில தேர்தல் குறித்து பல்வேறு ஊடகங்கள், கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதில், சத்தீஸ்கர், தெலுங்கனா, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் , ராஜஸ்தானில் பாஜக, மிசோராமில் மாநில கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த கணிப்பில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே, 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பது டிசம்பர் 3 ஆம் தேதி தெரிந்துவிடும் என்பது குறிப்பிடப்படுகிறது.

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

5 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

6 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

7 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

8 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

11 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

12 hours ago