மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று பிரதமர் மோடி.
நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை ஜூன் 30 ஆம் தேதி வரை அதாவது 5 ம் கட்ட ஊரடங்கு நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதில், ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் Unlock 1.0 என்று அடிப்படையில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று சரியாக 11 மணி அளவில் மனதின் குரல் அதாவது, மன் கீ பாத் நிகழ்ச்சியில் வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனா குறித்தும் ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் பேசினார். அதில், கொரோனா வைரசுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் சேவை மனபான்மை காரணமாகவே இந்த போரில் வலுவுடன் போராட முடிகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், போலீஸ், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மேலும், பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில், நாம் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைதான் உலகமே உற்றுநோக்கியுள்ளது. மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் தான் வைரஸில் இருந்து நன்மை காத்துக்கொள்ள முடியும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…