கேரள நாட்டில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்நிலையில் இதிலிருந்து மக்களை காப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கினர். நான்காம் கட்டமாக 18 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தற்போது தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் உள்ள வயநாட்டில் தான் முதல் முதலாக அனைத்து இளைஞர்களுக்கும் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் 6.51 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக இலக்கை நிர்ணயித்துள்ளனர்.
இதில் அங்கு 6.16 லட்சம் பேருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 636 பேருக்கு படுக்கையில் இருந்தவாறு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…