Categories: இந்தியா

வயநாடு நிலச்சரிவு : புதைந்த வீட்டிலிருந்து உயிரோடு வந்த 4 பேர்..! நிகழ்ந்தது எப்படி?

Published by
பால முருகன்

வயநாடு நிலச்சரிவு : தொடர் கனமழை காரணமாக கேரளாவில் பெய்த கனமழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சிலர் இந்த நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் 5-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாட்டின் சூரல் மலை பகுதியில் இருந்து 4 மீட்டர் தொலைவில் இருந்த படவேட்டிக்குன்னுவில் பகுதியில் 4-வது நாளாக  இந்திய ராணுவபடை மீட்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த சமயத்தில் மண்ணிற்குள் புதைத்து இருந்த வீடு ஒன்றை பார்த்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து 2 ஆண்கள், 2 பெண்கள் உயிரோடு  மீட்கப்பட்டுள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில், அடுத்ததாக என்ன செய்யப்போகிறோம் என்ற பயத்துடன் வீட்டிற்குள் அந்த 4 பேரும் இருந்த நிலையில், இந்திய ராணுவபடை  அவர்களை உயிருடன் மீட்டு விமானம் மூலம்  மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர்கள் நலமாக இருக்கிறார்கள். மீட்கப்பட்ட அந்த 4 பேரில் ஒருவருடைய பெயர் ஜானி என்பது தெரிய வந்து இருக்கிறது. அவர் சொந்தமாக தோட்டம் வைத்து அதனை பராமரிப்பு செய்து வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும், உயிருடன் மீட்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு காலில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட போது வீட்டிற்குள் இருந்த அந்த 4 பேரும் உயரமான இடத்திற்கு சென்ற காரணத்தால் தான் உயிர் பிழைத்தார்கள் எனவும் இந்திய ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

நிலச்சரிவை தொடர்ந்து அதிக பாதிப்புகளை சந்தித்த சூரல்மலையில் உள்ள பெய்லி இடங்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அங்கிருக்கும் பாலத்தில் அங்குள்ள மக்கள் அங்கும் இங்கும் நடந்து சென்று வருகிறார்கள். இன்னும் ஒரு சில தினங்களில் வயநாடு முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

5 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

5 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

6 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

7 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

7 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

7 hours ago