கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் – டெல்லி முதல்வர்!

Published by
Rebekal
  • கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  • மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் 19,420 டன் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக டெல்லியில் கொரோனா வைரஸின் தீவிரம் குறைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தற்பொழுது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு தளர்வு குறித்து அறிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளதாகவும், புதிய வகை வைரஸ்களை கண்டறிய இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக டெல்லியில் 19,420 டன் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், மேலும்,150 டன் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இந்திரபிரசாதா கேஸ் நிறுவனத்திடம் பேசி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

5 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

5 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

6 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

6 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

7 hours ago