கடந்த சில வாரங்களாக டெல்லியில் கொரோனா வைரஸின் தீவிரம் குறைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தற்பொழுது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு தளர்வு குறித்து அறிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளதாகவும், புதிய வகை வைரஸ்களை கண்டறிய இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக டெல்லியில் 19,420 டன் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், மேலும்,150 டன் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இந்திரபிரசாதா கேஸ் நிறுவனத்திடம் பேசி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…