WrestlersmeetAazad [Image Source : inshorts]
பீம் ஆர்மி தலைவர் மீதான தாக்குதலை கண்டிப்பதாக மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் நேற்று உத்தரப்பிரதேசத்தில் சஹாரன்பூர் எனும் ஊரில் தனது கட்சி நிர்வாகி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தியோபந் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
அவரை குறிவைத்து நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இருந்தும் வயிற்றில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக தியோபந்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மருத்துவ மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் தலித் தலைவரும் பீம் ஆர்மி தலைவருமான சந்திர சேகர் ஆசாத்தை மருத்துவமனையில் சந்தித்துள்ளனர்.
இதன்பின், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ஆசாத் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம். உண்மைக்காக நிற்கும் இவரைப் போன்றவர்கள் தாக்கப்படுவது தவறு. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…