Categories: இந்தியா

தேர்தல் முடிவு பாஜகவுக்கு பின்னடைவு.! ஜனநாயகத்தின் வெற்றி.! கார்கே பேட்டி.

Published by
மணிகண்டன்

காங்கிரஸ்: மக்களவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் இந்தியா முழுக்க உள்ள தொகுதிகளில் இருந்து வெளியாகி வருகின்றன. இதில் NDA கூட்டணி 293 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய பிரதான காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மிகவும் மோசமான சூழலில் இந்த தேர்தலை சந்தித்ததை நீங்கள் அறிவீர்கள். வருமானவரி கணக்குகள் முதல் பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக செயல்படுவது வரை அரசு இயந்திரம் ஒவ்வொரு அடியிலும் தடைகளை உருவாக்கியது. ஆரம்பம் முதல் இறுதி வரை காங்கிரஸின் பிரச்சாரத்திற்கு சாதகமான சூழல் இருந்தது.

பணவீக்கம், வேலையின்மை, விவசாய நெருக்கடி மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற பிரச்சனைகளை நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தோம். பிரதமர் மோடி நடத்திய பிரச்சாரம் வரலாற்றில் நீண்ட காலமாக நினைவில் நிற்கும்.

இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் பொதுமக்களின் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி. இந்த தேர்தலானது பொதுமக்களுக்கும் மோடிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். மக்கள் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. குறிப்பாக ஆளும் கட்சியான பாஜக ஒரு நபர், ஒரு முகம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது அவர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பாஜகவின் ஆணவதிற்கு தோல்வி கிடைத்துள்ளது என கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

45 minutes ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

1 hour ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

2 hours ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

10 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

11 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

12 hours ago