துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம்- விவசாயிகள் ..!

Published by
murugan

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் 2 மாதங்களாக போராடிவருகின்றனர். கடந்த 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து  ஏறக்குறைய 5 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நடந்தது சம்பவம் போன்று உத்தரபிரதேசத்திலும் நடந்து விடக்கூடாது என்பதற்க்காக உத்தரபிரதேச அரசு காசிப்பூர் எல்லையில் உள்ள விவசாயிகள் அகற்ற முடிவு செய்தது. ஆனால், காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அந்த இடத்தை காலி செய்யுமாறு உத்தரபிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால், உத்தரபிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு பாரதிய கிசான் யூனியன் வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், நாங்கள் எங்கையும் போகமாட்டோம் இங்குதான் இருப்போம், போலீசார் என்ன நடவடிக்கை வேண்டுமெனலும் எடுத்து கொள்ளட்டும், போராட்டத்தை கலைக்கமுடியாது என தெரிவித்தார். மேலும், மூன்று விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை பல விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தொடர வேண்டும் என கூறினார்.

நாங்கள் லாத்தி அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று ஒரு விவசாயி கூறினார். தற்போது காசிப்பூர் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

30 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

4 hours ago