நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக்கியுள்ளனர். மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க அனுமதி இல்லை என்று மாடர்னா, ஃபைசர் ஆகிய அமெரிக்க தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை அதிகரித்துள்ளனர். இந்நிலையில், மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனத்தை அணுகியுள்ளன.
பஞ்சாப் மாநில அரசு கொரோனா தடுப்பூசியான மாடர்னா, ஃபைசர் ஆகிய நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டது. இதில் மாடர்னா, ஃபைசர் தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க எங்களது கொள்கை அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளுக்கோ அல்லது தனியார்களுக்கோ தடுப்பூசி குறித்த தொடர்பை வைத்துக்கொள்ள எங்கள் நிறுவனம் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எங்கள் நிறுவனம் நேரடியாக இந்தியாவின் மத்திய அரசை மட்டுமே தொடர்பு கொள்ளும் என்று தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், மாடர்னா, ஃபைசர் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் கைவிரித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனங்களின் முடிவால் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்கள் சற்று கலக்கமடைந்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…