பாஜகவை சேர்ந்த கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளின் திருமணத்தை ரூபாய் 500 கோடி செலவில் தொடர்ந்து 9 நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளார். திருமணத்திற்காக ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி ,, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் கர்நாடக அரசியல் முன்னணி தலைவர்களும் அழைக்கப்பட உள்ளனர். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் 40 ஏக்கர் நிலம் திருமணத்திற்காக பயன்ப்பட உள்ளது. இதுதவிர 27 ஏக்கர் நிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ,15 ஏக்கர் நிலத்தில் வாகனங்கள் நிறுத்தவும் பயன்பட உள்ளது.
அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளின் ஒப்பனை செய்ய தீபிகா படுகோனின் மேக்கப் மேனை அழைக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் அம்பானி மகள் ஈஷாவின் திருமணத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த ஜெயராமன் பிள்ளை தான் திருமண நிகழ்ச்சியில் படம்பிடிக்க பொறுப்பேற்றுள்ளார்.
மேலும் சினிமா நட்சத்திரங்களுக்கு ஆடைகள் வடிவமைக்க சந்தனா சந்தா தான் அமைச்சர் ஸ்ரீராமுலு மகளின் ஆடைகள் வடிவமைக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக கட்சியில் இருந்து விலகி உள்ள கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கடந்த 2016 -ம் ஆண்டு தனது மகள் பிரம்மனியின் திருமணத்தை ரூ.550 கோடி செலவில் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண ஏற்பாடுகள் கடந்த மாதம் பிப்ரவரி 27 -ம் தேதி தொடங்கிய வரும் மார்ச் 5 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…