இந்திய துணை ராணுவ பிரிவுகளில் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர். இந்தியா-சீனாஎல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியில் 90,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் திருமணமாகாத 2,500ஆண்களும் , 1,000 பெண்களும் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். ஆபத்தான இடங்களில் பணியாற்றி வரும் இவர்களுக்கு வரன் தேடுவது இவர்களின் குடும்பத்தினருக்கு சிரமமாக உள்ளது என கூறுகின்றனர்.
இதனால் பல வீரர்களுக்கு வயது அதிகரித்தே செல்கிறது என இந்தோ-திபெத் எல்லைப்படை உயர் அதிகாரிகளுக்கு கவலை அளித்து உள்ளது.இந்நிலையில் தங்கள் படைக்குள்ளேயே தங்களுக்கு பொருத்தமான ஜோடியை தேர்ந்துதெடுக்கும் வகையில் ஒரு திருமண வெப்சைட்டை உருவாக்கும் படி தொழில் நுட்ப பிரிவிடம் இயக்குனர் ஜெனரல் தேஸ்வல் கூறினார் .
கடந்த 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த தளத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதில் வீரர் மற்றும் வீராங்கனைகளின் பதவி ,சொந்த ஊர் , எப்போது பணியில் சேர்ந்தனர் ,தற்போது எங்கு வேலை செய்து வருகின்றனர் , புகைப்படம் மற்றும் அனைத்து தகவல்களும் உள்ளது. மேலும் இதில் மோசடிக்கு இடமிருக்காது என உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…