Categories: இந்தியா

West Bengal: மேற்கு வங்க எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு ரூ.40,000 ஊதிய உயர்வு – முதல்வர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நடைபெற்ற சட்டசபையில் அறிவித்தார். மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதலமைச்சராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3வது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக செயல்பட்டு வருகிறார். எனவே, ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 220 எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியான பிஜிபிஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ, எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கு மொத்தம் 69 எம்எல்ஏக்கள் மற்றும் பிற கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏக்களும், 2 தொகுதி காலியாகவும் உள்ளன.

இந்த நிலையில், மேற்குவங்கத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டு வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய மம்தா பானர்ஜி, எம்எல்ஏக்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்களின் மாதச் சம்பளத்தை ஒவ்வொரு பிரிவினருக்கும் ரூ.40,000 உயர்த்துவதாக அறிவித்தார்.

அதாவது, மேற்கு வங்கங்கத்தில் எம்எல்ஏக்களுக்கான மாத ஊதியத்தை மேலும் ரூ.40,000 உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநில எம்எல்ஏக்களை விட குறைவாக இருப்பதால் மேற்குவங்க எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு என அம்மாநில முதல்வர் விளக்கமளித்தார். ஏற்கனவே மேற்குவங்க எம்எல்ஏக்கள் ரூ.81,000 மாத ஊதியம் பெற்று வந்த நிலையில், தற்போது ரூ.1.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் எம்எல்ஏக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்று அமைச்சர்களின் மாத ஊதியம் ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முதல்வரின் சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரையில் கேபினட் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மாத சம்பளம், அலோவன்ஸ்கள் என 3 வகைகளில் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

7 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

7 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

8 hours ago

இளையராஜா VS என் பெயர் பாக்கும்போது பெருமையா இருக்கு…நடிகை வனிதா வேதனை!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…

9 hours ago

INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…

10 hours ago