Categories: இந்தியா

West Bengal: மேற்கு வங்க எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு ரூ.40,000 ஊதிய உயர்வு – முதல்வர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் மாதம் ரூ.40,000 உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நடைபெற்ற சட்டசபையில் அறிவித்தார். மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதலமைச்சராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3வது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக செயல்பட்டு வருகிறார். எனவே, ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 220 எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியான பிஜிபிஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ, எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கு மொத்தம் 69 எம்எல்ஏக்கள் மற்றும் பிற கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏக்களும், 2 தொகுதி காலியாகவும் உள்ளன.

இந்த நிலையில், மேற்குவங்கத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டு வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய மம்தா பானர்ஜி, எம்எல்ஏக்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்களின் மாதச் சம்பளத்தை ஒவ்வொரு பிரிவினருக்கும் ரூ.40,000 உயர்த்துவதாக அறிவித்தார்.

அதாவது, மேற்கு வங்கங்கத்தில் எம்எல்ஏக்களுக்கான மாத ஊதியத்தை மேலும் ரூ.40,000 உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநில எம்எல்ஏக்களை விட குறைவாக இருப்பதால் மேற்குவங்க எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு என அம்மாநில முதல்வர் விளக்கமளித்தார். ஏற்கனவே மேற்குவங்க எம்எல்ஏக்கள் ரூ.81,000 மாத ஊதியம் பெற்று வந்த நிலையில், தற்போது ரூ.1.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் எம்எல்ஏக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்று அமைச்சர்களின் மாத ஊதியம் ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முதல்வரின் சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரையில் கேபினட் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மாத சம்பளம், அலோவன்ஸ்கள் என 3 வகைகளில் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago