ட்ரோன் விதிகள் 2021 இன் கீழ்,புதிய ட்ரோன் கொள்கையை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் ட்ரோன்களின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது.பல்வேறு பணிகளுக்கு இந்த ட்ரோன்கள் பயன்படுகின்றன.இதனால்,சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட – ட்ரோன் விதிகள், 2021 ஐ பொது மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது.
இந்த புதிய விதிகள்,நடப்பு ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஆளில்லாத விமான விதிகள் 2021-க்கு மாற்றாக வெளியிடப்பட்டது. இந்த புதிய ட்ரோன் விதிகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு ஆகஸ்ட் 5-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில்,மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய ட்ரோன் கொள்கையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ட்ரோன் விதிகள் 2021 இன் கீழ்,
பிரதமர் மோடி :
இந்த புதிய ட்ரோன் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
“புதிய ட்ரோன் விதிகள் ஸ்டார்ட் அப்களுக்கும் இந்த துறையில் வேலை செய்யும் நமது இளைஞர்களுக்கும் பெரிதும் உதவும். இது புதுமை மற்றும் வணிகத்திற்கான புதிய சாத்தியங்களைத் திறக்கும். இந்தியாவை ட்ரோன் மையமாக மாற்ற புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பொறியியலில் இந்தியாவின் பலத்தை மேம்படுத்த இது உதவும்.
புதிய ட்ரோன் விதிகள் இந்தியாவில் இந்தத் துறைக்கு ஒரு முக்கிய தருணத்தைத் தொடங்குகின்றன. விதிகள் நம்பிக்கை மற்றும் சுய சான்றிதழ் அடிப்படையிலானது. ஒப்புதல்கள், இணக்கத் தேவைகள் மற்றும் நுழைவு தடைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…