இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25- ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, மே 31 -ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்னர், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வருகின்ற 31- ஆம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால், ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் திறக்க ஆலோசித்து வருவதாகவும், திரையரங்குகளில் 30% பேர் அனுமதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், மெட்ரோ ரயில்களை இயக்க டெல்லி மாநில அரசு அனுமதியை கோரியுள்ளது. ஆனால், மத்திய அரசு இது குறித்து எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், மத்திய அரசு தளர்வுகளை அறிவிக்கின்ற மாதிரி இருந்தால் கவனமாக அறிவிக்கும் என தெரிகிறது.
நேற்று முன்தினம் “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கொரோனா வைரஸ் துவக்கத்தில் இருந்ததை போலவே இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…