3 வேளாண் சட்டங்களும் இடைகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் எதற்காக போராடுகிறீர்கள்…? – உச்சநீதிமன்றம்

Published by
லீனா

3 வேளாண் சட்டங்களும் உச்சநீதிமன்றத்தால் இடைகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  எதற்காக போராடுகிறீர்கள்?

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 300 நாட்களுக்கு மேலாக இந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெரும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், விவசாயிகள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சாலையில் செல்லக்கூடியவர்கள் பெரும் அவதிக்குள்ளாவதாகவும், இதனால் பல சிரமங்களை சந்திப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள்  குடியிருப்புவாசிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கன்வில்கர் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பதிலளிக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்பப்பட்ட நிலையில், சாலை மறியலுக்கு, தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.   உத்தியாரப்பிரதேசம்,ஹரியானா, டெல்லி காவல்துறையினர் கணைகளை தடுத்து  நிறுத்தியிருப்பதால் தான், சாலைகளிலேயே அமர்ந்திருக்கிறோம் என கூறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த  நீதிபதிகள், ஏற்கனவே 3 வேளாண் சட்டங்களும் உச்சநீதிமன்றத்தால் இடைகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  எதற்காக போராடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி இந்த சட்டம் அமல்படுத்தப்படாது. மத்திய அரசும் தற்போதைக்கு இந்த சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.

இவ்வாறு அனைத்து தரப்பும் தெளிவாக இருக்கும் போது, விவசாயிகள் எதற்காக போராடுகிறீர்கள். நீங்கள் யாருக்கு எதிராக, எதற்கு எதிராக போராடுகிறீர்கள் என பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

Recent Posts

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

1 hour ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

2 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

2 hours ago

12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி.., இந்த 7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.!

சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…

3 hours ago

உயிரிழந்த பெண் யானை.., வயிற்றில் ஆண் குட்டி.! காக்கத் தவறியது ஏன்?

கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…

3 hours ago

உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…

4 hours ago