இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3980 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் புதிதாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 2.30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,980 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 1.72 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடரும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றுவதை வழக்கப்படுத்தி கொள்வோம்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…